19 November 2012

72. சோமதேவன் புகழ்

ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!

சரணம்

நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
      வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
      துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்.
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பய்
      உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்
      பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)

-பாரதியார்

No comments:

Post a Comment