பல்லவி
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)
சரணங்கள்
பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)
மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)
யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)
-பாரதியார்
No comments:
Post a Comment