03 November 2012

46. வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

உருவாய் அறிவில் ஒளிர்யாய் - கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவய் - கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் - கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே - கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்)

-பாரதியார்

No comments:

Post a Comment