10 November 2012

56. திருக்காதல்

திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்
வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்
மையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது
தேனே! என்திரு கண்ணே - எனையுகந்து
தானே! வருந் திருப் - பெண்ணே

-பாரதியார்

No comments:

Post a Comment