16 January 2013

2. ஐய பேரிகை

பல்லவி

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!

சரணங்கள்

1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
    பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
    வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
   வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்                                  (ஐயபேரிகை)

2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
   இன்னமு தினையுண்டு களித்தோம்;
   கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
   காலன் நடுநடுங்க விழித்தோம்.                                             (ஐய பேரிகை)

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
   கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
   நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
   நோக்க நோக்கக் களியாட்டம்.                                                (ஐய பேரிகை)

No comments:

Post a Comment