08 October 2012

3. வேலன் பாட்டு

ராகம் - புன்னாகவராளி
தாளம் - திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை
      வேலவா! - அங்கோ
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
      யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
      வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை
      தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
      பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
      கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
      வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக்
      கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
      கடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப்
      புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
      செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
      குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி
      துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
      மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
      மணங்கொண்ட வேலவா!

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
      மாகுதே, - கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
      மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
      யாவையும் © இங்கு
நீங்கி அடியரை நித்தமுங்
      காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி யவுணரின்
      கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித் தண்டங் குலுஙக
      நகைத்திடுஞ் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு
      தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன
      லே, வடி வேலவா!

-பாரதியார்

No comments:

Post a Comment