20 October 2012

20. சக்திக் கூத்து

ராகம் - பியாக்

பல்லவி


தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? - சிவ
சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)

புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன்
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)

-பாரதியார்

No comments:

Post a Comment